செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஆய்வு

Published On 2020-07-08 08:44 GMT   |   Update On 2020-07-08 08:47 GMT
சாந்தவேலுர் ஆரம்ப பள்ளியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிக்காக நடந்த சிறப்பு மருத்துவ முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள பட்டுநூல்சத்திரம் அரசு பள்ளி, சுங்குவார்சத்திரத்தை அடுத்த சாந்தவேலுர் ஆரம்ப பள்ளியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிக்காக நடந்த சிறப்பு மருத்துவ முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சுப்பிரமணியன், கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சப்-கலெக்டர் சரவணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி, ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News