செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா

Published On 2020-07-07 10:04 GMT   |   Update On 2020-07-07 10:04 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் 34 வயது ஆண், 26 வயது பெண் மற்றும் படப்பை ஊராட்சி பகுதியில் 68 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 2,729 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 1,032 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1661 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் வட்டார மருத்துவமனையில் பணியாற்றி வரும் 34 வயது டாக்டர், பனையஞ்சேரி ஊராட்சி சின்ன காலனியில் வசித்து வரும் 28 வயது வாலிபர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நயப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர், மணவாளநகரில் டாக்டரின் உறவினர்கள் 2 பேர், பேரம்பாக்கத்தில் டாக்டரின் உறவினர் ஒருவர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரையில் 4,983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 3,217 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,666 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர். ஊத்துக்கோட்டை பஜார் தெருவை சேர்ந்த 55 வயதான நபர் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள சிலப்பதிகாரம் தெருவை சேர்ந்த 33 வயது ஆண், ஊரப்பாக்கம் ஊராட்சி அய்யஞ்சேரி கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் 36 வயது பெண், 34 வயது வாலிபர், நந்திவரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த 25 வயது இளம்பெண், வண்டலூர் ஊராட்சி ஒட்டேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 31 வயது இளம்பெண், அஷ்டலட்சுமி நகரில் வசிக்கும் 57 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,853 ஆக உயர்ந்தது. இவர்களில் 3,766 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News