செய்திகள்
கைது

காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தியவர் கைது

Published On 2020-07-04 08:33 GMT   |   Update On 2020-07-04 08:33 GMT
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாற்று பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News