செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் தெளிவாக தெரிந்த சூரிய கிரகணம்
நீலகிரி மாவட்டத்தில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது.
ஊட்டி:
சூரியனை விட மிகவும் சிறிய துணைக்கோளான சந்திரன், பூமிக்கு அருகில் இருப்பதால் நமக்கு பெரியதாக தோன்றுகிறது. முழு சூரிய கிரகணத்தின்போது சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கிறது. இந்த அபூர்வ சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காலை 10.22 மணியளவில் சூரிய கிரகண நிகழ்வு தொடங்கியது. சூரியனை நிலவு மறைத்ததால் கொஞ்சம், கொஞ்சமாக வெளிச்சம் குறைந்துகொண்டே வந்தது. சுமார் அரை மணி நேரத்தில் வானத்தை மேகமூட்டம் சூழ்ந்து கொண்டதால், சூரிய கிரகணத்தை காண முடியவில்லை. காலை 11 மணிக்கு மேல் சூரிய கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது.
தொடர்ந்து விட்டு, விட்டு மேகமூட்டம் வந்ததால் சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை. சந்திரனால் மறைக்கப்பட்ட சூரியன் விடுபட மெல்ல, மெல்ல வெளிச்சம் அதிகரித்துக்கொண்டே வந்தது. இந்த நிகழ்வு நடந்த போது ஊட்டி நகரில் குளிர்ந்த காலநிலை நிலவியது. நிகழ்வை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடியே பிரத்தியேக கண்ணாடிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்த்தனர். சிலர் வெல்டிங் கடைகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி வழியாக ஆர்வத்துடன் பார்த்தனர். இருப்பினும் அவ்வப்போது கடும் மேகமூட்டம் காரணமாக சூரியகிரகணம் தெரியாததால் முழுமையாக பார்க்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் சூரிய கிரகணத்தையொட்டி கோவில்களில் வழக்கம்போல் நடைபெறும் பூஜைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்குக்கு மத்தியில் ஆகம விதிகளின்படி கோவிலில் நடந்து வரும் சிறப்பு பூஜைகள் நிறுத்தப்பட்டு, நடை அடைக்கப்பட்டது. ஊட்டி மாரியம்மன் கோவில், சீனிவாச பெருமாள் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை அடைக்கப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்த பின்னர் வழக்கம்போல் பூஜைகள் நடந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூட்டம் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஊட்டி அருகே முத்தோரையில் உள்ள மத்திய அரசின் ரேடியோ வானியல் மையத்தில் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
சூரியனை விட மிகவும் சிறிய துணைக்கோளான சந்திரன், பூமிக்கு அருகில் இருப்பதால் நமக்கு பெரியதாக தோன்றுகிறது. முழு சூரிய கிரகணத்தின்போது சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கிறது. இந்த அபூர்வ சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காலை 10.22 மணியளவில் சூரிய கிரகண நிகழ்வு தொடங்கியது. சூரியனை நிலவு மறைத்ததால் கொஞ்சம், கொஞ்சமாக வெளிச்சம் குறைந்துகொண்டே வந்தது. சுமார் அரை மணி நேரத்தில் வானத்தை மேகமூட்டம் சூழ்ந்து கொண்டதால், சூரிய கிரகணத்தை காண முடியவில்லை. காலை 11 மணிக்கு மேல் சூரிய கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது.
தொடர்ந்து விட்டு, விட்டு மேகமூட்டம் வந்ததால் சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை. சந்திரனால் மறைக்கப்பட்ட சூரியன் விடுபட மெல்ல, மெல்ல வெளிச்சம் அதிகரித்துக்கொண்டே வந்தது. இந்த நிகழ்வு நடந்த போது ஊட்டி நகரில் குளிர்ந்த காலநிலை நிலவியது. நிகழ்வை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடியே பிரத்தியேக கண்ணாடிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்த்தனர். சிலர் வெல்டிங் கடைகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி வழியாக ஆர்வத்துடன் பார்த்தனர். இருப்பினும் அவ்வப்போது கடும் மேகமூட்டம் காரணமாக சூரியகிரகணம் தெரியாததால் முழுமையாக பார்க்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் சூரிய கிரகணத்தையொட்டி கோவில்களில் வழக்கம்போல் நடைபெறும் பூஜைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்குக்கு மத்தியில் ஆகம விதிகளின்படி கோவிலில் நடந்து வரும் சிறப்பு பூஜைகள் நிறுத்தப்பட்டு, நடை அடைக்கப்பட்டது. ஊட்டி மாரியம்மன் கோவில், சீனிவாச பெருமாள் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை அடைக்கப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்த பின்னர் வழக்கம்போல் பூஜைகள் நடந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூட்டம் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஊட்டி அருகே முத்தோரையில் உள்ள மத்திய அரசின் ரேடியோ வானியல் மையத்தில் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.