செய்திகள்
கடலூரில் சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
கடலூரில், சுயஉதவிக்குழு பயிற்றுனர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பயிற்சியை மகளிர் திட்ட உதவி இயக்குனர் விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளை சேர்ந்த சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுனர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு 2 நாட்கள் கொரோனா விழிப்புணர்வு பயிற்சி கடலூர் பாதிரிக்குப்பம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடந்தது. பயிற்சியை மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா ஆலோசனையின் பேரில் உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், கொரோனா நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே நீங்கள் அனைவரும் இந்த நோய் தீரும் வரை கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதோடு, கொரோனாவை தடுக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கவேண்டும்.
அப்போது தான் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். இங்கு பயிற்சி பெறும் நீங்கள் உங்கள் ஊராட்சிகளில் சென்று பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன் சுயஉதவிக்குழு பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளித்தார். வீடியோ மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 51 ஊராட்சிகளை சேர்ந்த பயிற்றுனர்கள், ஊராட்சி கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைத்து ஊராட்சிகளிலும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளை சேர்ந்த சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுனர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு 2 நாட்கள் கொரோனா விழிப்புணர்வு பயிற்சி கடலூர் பாதிரிக்குப்பம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடந்தது. பயிற்சியை மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா ஆலோசனையின் பேரில் உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், கொரோனா நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே நீங்கள் அனைவரும் இந்த நோய் தீரும் வரை கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதோடு, கொரோனாவை தடுக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கவேண்டும்.
அப்போது தான் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். இங்கு பயிற்சி பெறும் நீங்கள் உங்கள் ஊராட்சிகளில் சென்று பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன் சுயஉதவிக்குழு பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளித்தார். வீடியோ மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 51 ஊராட்சிகளை சேர்ந்த பயிற்றுனர்கள், ஊராட்சி கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைத்து ஊராட்சிகளிலும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.