செய்திகள்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பொறையாறு:
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் மதியரசன், வரித்தண்டலர் கருணாநிதி, பதிவு எழுத்தர் மோகன் உள்ளிட்டோர் தரங்கம்பாடி, பொறையாறு, காத்தான்சாவடி, ராஜீவ்புரம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாகனங்களில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.