செய்திகள்
வேதாரண்யம் அருகே சாராயம் விற்றவர் கைது
வேதாரண்யம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வர்ஜினியா மற்றும் போலீசார் புஷ்பவனம் பகுதியில் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புஷ்பவனம் திரவுபதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த காளியப்பன்(வயது44) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளியப்பனை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.