செய்திகள்
கைது

புவனகிரி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

Published On 2020-06-19 18:48 IST   |   Update On 2020-06-19 18:48:00 IST
புவனகிரி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:

சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று பயணியர் விடுதி அருகே புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து திரும்பி செல்ல முயன்றனர். இதைபார்த்து சந்தேகமடைந்த போலீசார் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து புவனகிரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒருவர் சிதம்பரம் கொய்யாப்பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த மாயவன் மகன் பிரபு(24) என்பதும், மற்றொருவர் அவருடைய நண்பரான திருச்சி லால்குடியை சேர்ந்த மதி மகன் சூரியா(20) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து புவனகிரி சின்னப்ப முதலியார் தெருவை சேர்ந்த முபாரக்அலி மற்றும் அவரது உறவினர் இதயத்துல்லா ஆகியோருக்கு சொந்தமான விலை உயர்ந்த 2 மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தபோது போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, பிரபு, சூரியா ஆகியோரை கைது செய்ததுடன் தலா 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். மேலும் கைதான 2 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News