செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

மதிப்பெண் குளறுபடியில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-06-19 07:28 GMT   |   Update On 2020-06-19 07:28 GMT
காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குளறுபடியில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
ஈரோடு:

கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என கூறி இருந்தார்.

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதால் தனியார் பள்ளிகள் குளறுபடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குளறுபடியில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தோ்வு மதிப்பெண் எங்களிடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News