செய்திகள்
நகைகளை அடகு வைக்க கடைகளில் குவியும் மக்கள்
ஊட்டியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த மக்கள், நகைகளை அடகு வைக்க கடைகளில் குவிந்து வருகின்றனர்.
ஊட்டி:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கால் நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு கிடக்கிறது. மேலும் சுற்றுலா தொழிலை நம்பி இருந்தவர்கள், வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ டிரைவர்கள், நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் தங்களது வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டாலும், சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை நீடிப்பதால் இயல்புநிலை திரும்பவில்லை. இதனால் பலர் வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்தவர்கள் தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டில் இருக்கும் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் வாங்கி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் நகைக்கடைகளை தேடி குவிந்து வருகின்றனர். நேற்று ஊட்டி மெயின் பஜாரில் உள்ள 2 நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று உடனடியாக மக்கள் கூட்டத்தை வெளியேற்றினர். இரும்பு ஷட்டரை பாதியாக அடைத்து வைக்கவும், ஒருவர் உள்ளே வந்து சென்ற பின்னர் அடுத்த நபரை உள்ளே அனுமதிக்குமாறும் அறிவுறுத்தியதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
நகைக்கடைகளில் நகை வாங்க வந்தவர்களை விட அடமானம் வைக்க வந்தவர்கள் அதிகமாக இருந்தனர். அரசு பஸ் இயக்கப்படுவதால், ஊட்டி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்ததை காண முடிந்தது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதித்து அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாமல் உள்ளோம். சொந்தமான நகைகளை வட்டிக்கு அடமானம் வைத்து பணம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறோம் என்றனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கால் நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு கிடக்கிறது. மேலும் சுற்றுலா தொழிலை நம்பி இருந்தவர்கள், வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ டிரைவர்கள், நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் தங்களது வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டாலும், சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை நீடிப்பதால் இயல்புநிலை திரும்பவில்லை. இதனால் பலர் வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்தவர்கள் தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டில் இருக்கும் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் வாங்கி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் நகைக்கடைகளை தேடி குவிந்து வருகின்றனர். நேற்று ஊட்டி மெயின் பஜாரில் உள்ள 2 நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று உடனடியாக மக்கள் கூட்டத்தை வெளியேற்றினர். இரும்பு ஷட்டரை பாதியாக அடைத்து வைக்கவும், ஒருவர் உள்ளே வந்து சென்ற பின்னர் அடுத்த நபரை உள்ளே அனுமதிக்குமாறும் அறிவுறுத்தியதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
நகைக்கடைகளில் நகை வாங்க வந்தவர்களை விட அடமானம் வைக்க வந்தவர்கள் அதிகமாக இருந்தனர். அரசு பஸ் இயக்கப்படுவதால், ஊட்டி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்ததை காண முடிந்தது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதித்து அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாமல் உள்ளோம். சொந்தமான நகைகளை வட்டிக்கு அடமானம் வைத்து பணம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறோம் என்றனர்.