செய்திகள்
ஈரோட்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
ஈரோட்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்தவர் கோவேந்தன் (வயது 35). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஈரோட்டை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கோவேந்தன் மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான கோவேந்தனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்தவர் கோவேந்தன் (வயது 35). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஈரோட்டை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கோவேந்தன் மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான கோவேந்தனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.