செய்திகள்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க நீலகிரி மாணவி தேர்வு
இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படிக்க நுழைவுத்தேர்வு எழுதி இருந்த அனுபிரியா, வெற்றி பெற்று தேர்வாகி உள்ளார்.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தேனாடு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி லட்சுமி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர்களுடைய மகள் அனு பிரியா(வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படிக்க நுழைவுத்தேர்வு எழுதி இருந்தார். அதில் அனு பிரியா வெற்றி பெற்று, தேர்வாகி உள்ளார்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தேனாடு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி லட்சுமி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர்களுடைய மகள் அனு பிரியா(வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படிக்க நுழைவுத்தேர்வு எழுதி இருந்தார். அதில் அனு பிரியா வெற்றி பெற்று, தேர்வாகி உள்ளார்.