செய்திகள்
தற்கொலை

ஆம்பூர் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-06-14 19:41 IST   |   Update On 2020-06-14 19:41:00 IST
ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 55), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவருடைய உறவினர்கள் எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News