செய்திகள்
பெரம்பலூர் அருகே பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது
பெரம்பலூர் அருகே பணம் பறிக்க முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த லாடபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் என்கிற எழுத்தாணி (வயது 27). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று பெரம்பலூர் பழைய நிலையத்தில் அய்யலூரை சேர்ந்த சேகர் என்பவர் சென்று கொண்டிருந்தபோது, எழுத்தாணி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் போலீசார் உடனே அங்கு விரைந்து சென்று, எழுத்தாணியை கைது செய்தனர். பின்பு எழுத்தாணி பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.