செய்திகள்
வேலூர் ஜெயிலில் 9-வது நாளாக உண்ணாவிரதம்
வேலூர் ஜெயிலில் இன்று 9-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல்நிலை சோர்வடைந்துள்ளதால் குளுக்கோஸ் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அவருடைய மனைவி நளினி ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
15 நாட்களுக்கு ஒருமுறை இருவரும் சந்திக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக இருவரும் சந்திக்க முடியவில்லை. நளினி, முருகன் இருவரும் காணொளி மூலம் பேச அனுமதிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு முருகன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் மனவேதனையில் இருந்த முருகன் கடந்த 1-ந்தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இன்று 9-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல் நிலை சோர்வடைந்துள்ளது. நேற்று இரவு முருகனுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் குளுக்கோஸ் ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அவருடைய மனைவி நளினி ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
15 நாட்களுக்கு ஒருமுறை இருவரும் சந்திக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக இருவரும் சந்திக்க முடியவில்லை. நளினி, முருகன் இருவரும் காணொளி மூலம் பேச அனுமதிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு முருகன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் மனவேதனையில் இருந்த முருகன் கடந்த 1-ந்தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இன்று 9-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல் நிலை சோர்வடைந்துள்ளது. நேற்று இரவு முருகனுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் குளுக்கோஸ் ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.