செய்திகள்
போராட்டம்

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-06-06 09:20 GMT   |   Update On 2020-06-06 09:20 GMT
கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்தோஷ், கார்த்திகாதேவி, வைஷ்ணவி, கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்துச் செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
Tags:    

Similar News