செய்திகள்
தொழிலாளி தற்கொலை

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2020-06-06 08:13 GMT   |   Update On 2020-06-06 08:13 GMT
புதுவை அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை குரும்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது40) கட்டிட தொழிலாளி. இவருக்கு ராதிகா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கணபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் அவர் சரியாக வேலைக்கும் செல்வதில்லை. இதனால் ராதிகா அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனாலும் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் ராதிகா சிலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணபதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது ஏற்கனவே கடன் இருக்கும் போது இப்படி குடித்துவிட்டு வருகிறீர்களே என அவரது மனைவி கண்டித்தார். மனைவி கண்டித்ததால் கணபதி வேதனையடைந்து சாப்பிடாமல் வீட்டின் மாடிக்கு சென்றார்.

கோபம் தணிந்து சிறிது நேரம் கழித்து கணவர் சாப்பிட வருவார் என ராதிகா எதிர்பார்த்து இருந்தார். ஆனால் கணபதி வெகுநேரமாக வராததால் சந்தேகமடைந்து மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது இரும்பு பைப்பில் துப்பட்டாவால் கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு ராதிகா அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணபதியை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கணபதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News