செய்திகள்
தேர்வு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் நுழைவு சீட்டு வினியோகம்

Published On 2020-06-04 14:49 GMT   |   Update On 2020-06-04 14:49 GMT
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெறலாம் என்று புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வருகிற 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது.

பிளஸ்-1 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 26-ந் தேதி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வு வருகிற 16-ந் தேதி மாணவர்கள் படித்த பள்ளியிலேயே நடத்தப்பட உள்ளது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 24-ல் நடந்த தேர்வுக்கு ஊரடங்கால் வர முடியாத மாணவர்களுக்கான மறு தேர்வு வருகிற 18-ந் தேதி ஏற்கனவே எழுதிய தேர்வு மையங்களில் நடக்கிறது.

இந்த தேர்வுகளை எழுத உள்ள அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெறலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News