செய்திகள்
ரேசன் கடை (கோப்பு படம்)

புதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்

Published On 2020-06-04 07:22 GMT   |   Update On 2020-06-04 07:22 GMT
புதுச்சேரியில் ரேசன் கார்டுதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

புதுச்சேரி மாநிலத்தில் ரேசன் கார்டுதார்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணமாக வழங்க வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட முடியாது என்று புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு இலவச அரிசி தர ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜூன் 23ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசு, புதுவை ஆளுநர் கிரண் பேடி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News