செய்திகள்
வழக்கு பதிவு

நாகை அருகே தூய்மை பணியாளரை தாக்கியவர் மீது வழக்கு

Published On 2020-06-03 16:13 IST   |   Update On 2020-06-03 16:13:00 IST
நாகை அருகே தூய்மை பணியாளரை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நாகை:

நாகை மாவட்டம் காமேஸ்வரம் ஊராட்சியில் துய்மை காவலராக பணியாற்றி வருபவர் துரைராஜ். இவர் காமேஸ்வரம் கிராம பகுதியில் சுகாதார பணியில் ஈடுபட்ட போது சாலையில் கிடந்த மதுபாட்டில்கள் அப்புறப்படுத்தி உள்ளார்.

இதனை கண்ட டிரைவர் பிரபு துரைராஜை திட்டி தாக்கியுள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி கீழையூர் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News