செய்திகள்
கடல் சீற்றம்

கோடியக்கரையில் கடல் சீற்றம்- மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2020-06-01 13:25 GMT   |   Update On 2020-06-01 13:25 GMT
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதியில் பலத்த தெற்கு காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் குறைந்த அளவே சிறு படகுகளை பயன்படுத்தி குறைந்த தூரம் கரையோரமாகச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.


Tags:    

Similar News