செய்திகள்
ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி
ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் 6 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.
ஆலங்குடி:
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி இயக்குனர் சைலேந்திர பாபு உத்திரவின்பேரில் துணைஇயக்குனர் மத்திய மண்டலம் மீனாட்சி விஜய குமார் அறிவுரையின்படி ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் 6 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.
போட்டியை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உதவி மாவட்ட அலுவலர் செழியன் மற்றும் நிலைய அலுவலர் சரவணக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் 25 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் முகக்கவசத்துடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அமர்ந்திருந்தனர்.
முடிவில் மாவட்ட அலுவலர் பானுப்பிரியா போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.