செய்திகள்
நாகை அருகே மணல் லாரி மோதி தொழிலாளி பலி
நாகை அருகே மணல் லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதி தலைச்சங்காடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உலகநாதன்(வயது50). இவர் நேற்று தலைச்சங்காடு மேயின் ரோட்டில் நடந்து சென்றபோது மணல் லாரி மோதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அவரது மகன் சிலம்பரசன்(29) கொடுத்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகினறனர்.