செய்திகள்
சீர்காழியில் கோவில் இடத்தில் மண் எடுத்து விற்பனை- நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார்
சீர்காழியில் கோயில் இடத்தில் மண் எடுத்தவர்கள் மீதும் அதற்கு உறுதுணையாக இருந்த வருவாய்த்துறையினர் உள்ளிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு இடத்தில் ஒருவர் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்த நிலையில் அவ்விடத்தில் வருவாய்த்துறை அனுமதி பெற்று வி.ஏ.ஓ ஒருவர் பண்ணைகுட்டை அமைப்பது தொடர்பாக பொக்லைன் மற்றும் லாரிகளை கொண்டு மண் எடுத்து விற்பனை செய்ததாக தெரிகிறது.
இதனையறிந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் நிர்வாகத்தினர் கோயில் இடத்தில் மண் எடுத்தவர்கள் மீதும் அதற்கு உறுதுணையாக இருந்த வருவாய்த்துறையினர் உள்ளிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் அதில், கோவில் இடத்திலிருந்து மண் எடுத்து அதற்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி ரூபாய் பெற்றுத்தரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.