செய்திகள்
தொழிலாளி தற்கொலை

நாகூர் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-05-30 15:19 IST   |   Update On 2020-05-30 15:19:00 IST
நாகூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:

நாகூரை அடுத்த காரையூர் ரோட்டு தெருவை சேர்ந்த சிவபிரகாசம் மகன் வீரமலை (வயது35). தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வீரமலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News