செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

Published On 2020-05-29 09:32 GMT   |   Update On 2020-05-29 09:32 GMT
நாகை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீவளூர் அருகே உள்ள குருக்கத்தி புதுதெருவை சேர்ந்தவர்கள் பைகர் சாதிக் (வயது 44), சுபீர் (37). இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அதே பகுதியில் பள்ளிவாசல்அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சரிந்து விழுந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுபீர் இறந்தார். சாதிக் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News