செய்திகள்
வேதாரண்யத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம்- திருவாரூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது.
எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம், தோப்புத்துறை, பெரியகுத்தகை, நெய்விளக்கு, குரவப்புலம், நாகக்குடையான், கத்திரிப்புலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.