செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு ரூ.1,769 கோடி வழங்கியுள்ளது- எச்.ராஜா பேட்டி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு ரூ.1,769 கோடி வழங்கியுள்ளது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியில் பா.ஜ.க. சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அவற்றை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு எந்த தொழில் அதிபர்களுடைய கடன்களையும் தள்ளுபடி செய்யவில்லை. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அந்த வழக்கை நிலுவையில் வைக்க மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை தவறாக புரிந்துகொண்டு, வதந்தி பரப்பப்படுகிறது. கொரோனாவை எதிர்கொள்ள அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வரும் இந்த நேரத்தில், ‘ஒன்றிணைவோம் வா’ என மு.க.ஸ்டாலின் நாடகம் போடுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு மட்டும் ரூ.1,769 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது, என்றார்.