செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

இலுப்பூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்- விஜயபாஸ்கர் வழங்கினார்

Published On 2020-05-04 18:09 IST   |   Update On 2020-05-04 18:09:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சி பகுதியில் 12 இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்டுகைகளை சுத்தம் செய்யும் சானிடைசர், கிருமி நாசினி மருந்து உள்ளிட்டவை விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்டது.

அதனை இலுப்பூர் அரசு மருத்துவமனை முன்புறம் மற்றும் பேருந்து நிலைய த்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க் கெட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார், இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி, காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்துறை, பேரூராட்சித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News