செய்திகள்
ஆண்டிமடம் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
ஆண்டிமடம் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 38). இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு அங்கேயே சாராயம் காய்ச்சி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்தனர்.
மேலும் காய்ச்சிய சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பாத்திரங்களை கைப்பற்றி ரவி மற்றும் அவரது நண்பர் பழனிவேல்(37) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 38). இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு அங்கேயே சாராயம் காய்ச்சி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்தனர்.
மேலும் காய்ச்சிய சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பாத்திரங்களை கைப்பற்றி ரவி மற்றும் அவரது நண்பர் பழனிவேல்(37) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.