செய்திகள்
தற்கொலை

இளம்பெண் தற்கொலை- சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்

Published On 2020-04-27 18:34 IST   |   Update On 2020-04-27 18:34:00 IST
கம்மாபுரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்மாபுரம்:

கம்மாபுரம் அருகே உள்ள மேற்கிருப்பு மேல தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி வீரச்செல்வி(வயது 20). இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த வீரச்செல்வி வீட்டில் புடவையால் தூக்குப்போட்டுக்கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள நெய்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வீரச்செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அரவது தந்தை குமார் ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News