செய்திகள்
கோப்பு படம்

கறம்பக்குடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

Published On 2020-04-23 09:13 GMT   |   Update On 2020-04-23 09:13 GMT
கறம்பக்குடி அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தென்னகரைச் சேர்ந்த மனோகரன் மகள் பானுப்பிரியா (வயது 20). இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (26) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் மனோகரனுக்கு தெரிய வந்தது.

மனோகரன் பானுப்பிரியை உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று வைத்துள்ளார். மேலும் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பானுப்பிரியா வீட்டை விட்டு வெளியேறி காதலன் முருகானந்தம் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

இது குறித்து அறிந்ததும் மனோகரன் தனது உறவினர்களுடன் முருகானந்தம் வீட்டிற்கு சென்றார். இதனால் உயிருக்கு பயந்த காதல் ஜோடி கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

ஆலங்குடி டி.எஸ்.பி. முத்து ராஜா தலைமையில் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஹேமலதா, கறம்பக்குடி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் இரு வீட்டார் சார்பிலும் விசாரணை நடந்தது. இதில் பானுப்பிரியா காதலன் முருகானந்துடன்தான் செல்வேன் என்று கூறினார்.

அதன்பேரில் இருதரப்பு பெற்றோர்களிடம் போலீசார் சமரசமாக பேசினர். தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கறம்பக்குடி வடக்குத்தெரு மாரியம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின் காதலர்களுக்கு அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News