திருவரங்குளம் பகுதியில் 4 ஊராட்சி மன்றங்கள் சார்பில் மக்களுக்கு நிவாரண பொருட்கள்
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லத்திராகோட்டை, வாண்டாக்கோட்டை, மணியம்பளம், மாசான் விடுதி ஆகிய நான்குஊராட்சி மன்றங்களில் உள்ள பொதுமக்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கன்சல்பேகம், வனஜா, கலைமணி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் அரிசி 5 கிலோ, காய்கறிகள், பாமாயில் வழங்கப்பட்டது.
ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவமெய்யநாதன், திருவரங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் உஷா செல்வம், விஜயன், வல்லாத்திராக்கோட்டை துணைத்தலைவர் ஆறுமுகம், மணியம்பளம் முன்னாள் ஊ ராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் விஸ்வநாதன், மாஞ்சான் விடுதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அயூப்கான், துணைத்தலைவர் சாந்தி மயில்வாகனம், வாண்டாக் கோட்டை துணைத்தலைவர் கலைவாணி ரமேஷ் மற்றும் அந்தந்த ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.