செய்திகள்
பணம் மோசடி

பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.28 ஆயிரம் மோசடி

Published On 2020-04-22 10:55 GMT   |   Update On 2020-04-22 10:55 GMT
புதுக்கோட்டை அருகே பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.28 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இது குறித்த புகரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மாமுண்டிமட வீதியை சேர்ந்த சிவராமனின் மனைவி தமிழ்செல்வி (வயது 36). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக ஒரு பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு செல்போனில் தமிழ்செல்வியிடம் பேசியுள்ளார். அப்போது அவரிடம் வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க தங்களின் கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். கார்டு எண்ணை தெரிவிக்கும் படி அந்த பெண் கேட்டுள்ளார். இதனை நம்பிய தமிழ்செல்வி தனது வங்கியின் ஏ.டி.எம்.கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணையும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். உடனே எதிர் முனையில் பேசிய பெண் செல் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இந்த நிலையில் தமிழ்செல்வியின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரது கணக்கில் இருந்து ரூ.28 ஆயிரத்து 907 எடுக்கப்பட்டதாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த பெண் பேசிய செல்போன் எண்ணை பல முறை தொடர்பு கொண்டார். ஆனால் பதில் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதைத்தொடர்ந்து வங்கி மேலாளர் பேசுவது போல பேசி விவரங்களை பெற்று மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் தமிழ்செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News