செய்திகள்
வழக்குப்பதிவு

கொரோனா வைரஸ் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 8 பேர் மீது வழக்கு

Published On 2020-04-21 12:54 GMT   |   Update On 2020-04-21 12:54 GMT
கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 4 ஆயிரத்து 536 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து 2994 இரு சக்கர வாகனங்கள், 60 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது கடத்தலில் ஈடுபட்ட 421 பேர் கைது செய்யபட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News