செய்திகள்
கடலூரில் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
கடலூரில் கடலில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சொத்திக் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். மீனவர். இவரது மகன் ஆகாஷ்(வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை தந்தை, மகன் இருவரும் அந்த பகுதியில் உள்ள கடலுக்கு குளிக்க சென்றனர். அப்போது கடலில் இருவரும் குளித்துக்கொண்டு இருந்தபோது, எழுந்த ராட்சத அலையில் ஆகாஷ் சிக்கி, இழுத்து செல்லப்பட்டான்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காத்தவராயன், சக மீனவர்களுடன் சேர்ந்து மகனை தேடும் பணியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் கடலில் மூழ்கிய சிறுவனை மீட்டனர். அப்போது ஆகாஷ் மயங்கிய நிலையில் இருந்தான். இதையடுத்து அவனை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஆகாஷை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சொத்திக் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். மீனவர். இவரது மகன் ஆகாஷ்(வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை தந்தை, மகன் இருவரும் அந்த பகுதியில் உள்ள கடலுக்கு குளிக்க சென்றனர். அப்போது கடலில் இருவரும் குளித்துக்கொண்டு இருந்தபோது, எழுந்த ராட்சத அலையில் ஆகாஷ் சிக்கி, இழுத்து செல்லப்பட்டான்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காத்தவராயன், சக மீனவர்களுடன் சேர்ந்து மகனை தேடும் பணியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் கடலில் மூழ்கிய சிறுவனை மீட்டனர். அப்போது ஆகாஷ் மயங்கிய நிலையில் இருந்தான். இதையடுத்து அவனை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஆகாஷை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.