செய்திகள்
கபசுர குடிநீர்

குலமங்கலம் வடக்கு ஊராட்சி மன்றம் சார்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர்

Published On 2020-04-20 19:23 IST   |   Update On 2020-04-20 19:27:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கு ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட குலமங்கலம் வடக்கு ஊராட்சி மன்றத்தின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாஞ்சாலி செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் அந்த பகுதியில் உள்ள காய்கறி வியாபாரிகள், காய்கறி வாங்க வந்தவர்கள் மற்றும் பொது மக்கள் கபசுர குடிநீர் வாங்கி பருகினர். மேலும் வீடு வீடாக சென்றும் கபசுர குடிநீர் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News