செய்திகள்
கலெக்டர் அன்புச்செல்வன்

ஊரடங்கு நாளை முதல் கடுமையாக்கப்படும்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-04-19 17:23 IST   |   Update On 2020-04-19 17:23:00 IST
கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு நாளை முதல் கடுமையாக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலை இருந்தது. ஆனால், குறிப்பிட்ட சில நாட்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே கடலூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்குள் வந்து விட்டது. இதனால் நாளை (20-ந் தேதி) ஊரடங்கு தளர்த்தப்படாது. ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும். பொதுமக்கள் முககவசம் இன்றி வெளியே வந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைபடுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News