செய்திகள்
கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள்

கடலூர் நகராட்சியில் நவீன எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி - கலெக்டர் பார்வையிட்டார்

Published On 2020-04-18 20:22 IST   |   Update On 2020-04-18 20:22:00 IST
கடலூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை மற்றும் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
கடலூர்:

கடலூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை மற்றும் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதில் டேங்கர் லாரிகள் மற்றும் மினி லாரிகள் மூலம் கிருமிநாசினி வார்டு வார்டாக தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ 3 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் 2 நவீன கிருமி நாசினி தெளிக்கும் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு எந்திரம் நகராட்சிக்கு சொந்தமான லாரியில் பொருத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று காலை மஞ்சக்குப்பம் மணிக் கூண்டு அருகில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு எந்திரத்தை இயக்கி வைத்து கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News