செய்திகள்
ஈரோட்டில் அம்மா உணவகத்தில் குவியும் பொதுமக்கள்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 11 அம்மா உணவகங்களில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
ஈரோடு:
கொரோனா பரவல் தடுப்புக்காக கடந்த, 25-ந் தேதி முதல் ஊரடங்கு தொடர்கிறது. இதில் ஈரோடு, மீனாட்சிசுந்தரனார் சாலை, பெரிய மாரியம்மன் கோவில் பகுதி, மணிக்கூண்டு பகுதி, காந்திஜி சாலை, காளை மாட்டு சிலை பகுதி, ரெயில் நிலையம் என பல பகுதிகளிலும், 1,000-க்கும் மேற்பட்ட வெளியூர் தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள், ஊனமுற்றவர்கள், மனநிலை பாதித்தோர், வீடு இருந்தும் வெளியே உண்பர்கள் என உள்ளனர்.
இவர்களுக்கு, ஈரோடு சிறகுகள், அக்ஷயம், தாய்மை, உணர்வுகள் போன்ற பல்வேறு அறக்கட்டளை சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், பொட்டலமாக உணவு வழங்கி வந்தனர். மேலும் பலர் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட், பிரட், சுண்டல், பால் என பலவற்றையும் வழங்கினர்.
இதனால், ஈரோட்டில், மாநகராட்சி பள்ளிகளில், 180 பேர் வரை தங்க வைக்கப்பட்டு, பொது அமைப்பினர் உணவு வழங்குகின்றனர். ஆனால், 800-க்கும் மேற்பட்டோருக்கு உணவு கிடைக்காததால், ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள, 11 அம்மா உணவகங்களையும் நம்பி வருகின்றனர். தற்போது இவர்கள் அம்மா உணவகங்களில் சாப்பிட தொடங்கியுள்ளதால் அம்மா உணவுகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக உள்ளது.
இதுபற்றி, அம்மா உணவகத்தினர் கூறியதாவது:-
கொரோனாவுக்கான ஊரடங்குக்கு முன், ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் தினமும், 300 நபர்கள் சாப்பிடும் அளவுக்கு காலை, மாலையில் இட்லி, சாம்பார், சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் தயாரித்து வழங்கினோம்.
தற்போது, இரவில் ரவை உப்புமா, சில நாள் சாம்பார் சாதம் வழங்குகிறோம். ஒரு இட்லி, ஒரு ரூபாய், சாம்பார் சாதம், ஐந்து ரூபாய், தயிர் சாதம், மூன்று ரூபாய், உப்புமா, ஐந்து ரூபாய் என்ற விலையில் விற்கிறோம். தற்போது, ஒவ்வொரு உணவகத்திலும் ஒவ்வொரு நேரமும் கூடுதலாக, 200 நபர்களுக்கு உணவு தயாரித்து வழங்குகிறோம்.
இவ்வாறு, 11 உணவகத்திலும், 2,200 பேருக்கு கூடுதல் உணவு தரப்படுகிறது இருந்தும், வீதிகளில் வசிப்போர் அதிகமாக வருவதால், அவ்வப்போது கூடுதலாக, 50 பேருக்கு பகிர்ந்து வழங்கும் நிலை கூட ஏற்படுகிறது.
பொது அமைப்பினர், பொதுமக்கள் வழங்கும் உணவை, அம்மா உணவகத்தில் வைத்து வழங்க அனுமதித்தால், கடைசியாக வரும் பலரும் பசியாறுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கொரோனா பரவல் தடுப்புக்காக கடந்த, 25-ந் தேதி முதல் ஊரடங்கு தொடர்கிறது. இதில் ஈரோடு, மீனாட்சிசுந்தரனார் சாலை, பெரிய மாரியம்மன் கோவில் பகுதி, மணிக்கூண்டு பகுதி, காந்திஜி சாலை, காளை மாட்டு சிலை பகுதி, ரெயில் நிலையம் என பல பகுதிகளிலும், 1,000-க்கும் மேற்பட்ட வெளியூர் தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள், ஊனமுற்றவர்கள், மனநிலை பாதித்தோர், வீடு இருந்தும் வெளியே உண்பர்கள் என உள்ளனர்.
இவர்களுக்கு, ஈரோடு சிறகுகள், அக்ஷயம், தாய்மை, உணர்வுகள் போன்ற பல்வேறு அறக்கட்டளை சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், பொட்டலமாக உணவு வழங்கி வந்தனர். மேலும் பலர் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட், பிரட், சுண்டல், பால் என பலவற்றையும் வழங்கினர்.
இதனால், ஈரோட்டில், மாநகராட்சி பள்ளிகளில், 180 பேர் வரை தங்க வைக்கப்பட்டு, பொது அமைப்பினர் உணவு வழங்குகின்றனர். ஆனால், 800-க்கும் மேற்பட்டோருக்கு உணவு கிடைக்காததால், ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள, 11 அம்மா உணவகங்களையும் நம்பி வருகின்றனர். தற்போது இவர்கள் அம்மா உணவகங்களில் சாப்பிட தொடங்கியுள்ளதால் அம்மா உணவுகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக உள்ளது.
இதுபற்றி, அம்மா உணவகத்தினர் கூறியதாவது:-
கொரோனாவுக்கான ஊரடங்குக்கு முன், ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் தினமும், 300 நபர்கள் சாப்பிடும் அளவுக்கு காலை, மாலையில் இட்லி, சாம்பார், சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் தயாரித்து வழங்கினோம்.
தற்போது, இரவில் ரவை உப்புமா, சில நாள் சாம்பார் சாதம் வழங்குகிறோம். ஒரு இட்லி, ஒரு ரூபாய், சாம்பார் சாதம், ஐந்து ரூபாய், தயிர் சாதம், மூன்று ரூபாய், உப்புமா, ஐந்து ரூபாய் என்ற விலையில் விற்கிறோம். தற்போது, ஒவ்வொரு உணவகத்திலும் ஒவ்வொரு நேரமும் கூடுதலாக, 200 நபர்களுக்கு உணவு தயாரித்து வழங்குகிறோம்.
இவ்வாறு, 11 உணவகத்திலும், 2,200 பேருக்கு கூடுதல் உணவு தரப்படுகிறது இருந்தும், வீதிகளில் வசிப்போர் அதிகமாக வருவதால், அவ்வப்போது கூடுதலாக, 50 பேருக்கு பகிர்ந்து வழங்கும் நிலை கூட ஏற்படுகிறது.
பொது அமைப்பினர், பொதுமக்கள் வழங்கும் உணவை, அம்மா உணவகத்தில் வைத்து வழங்க அனுமதித்தால், கடைசியாக வரும் பலரும் பசியாறுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.