செய்திகள்
கீரமங்கலத்தில் பார்வையற்றோருக்கு உணவு பொருட்கள் வழங்கிய காட்சி.

ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் பார்வையற்றோருக்கு உணவு பொருட்கள்

Published On 2020-04-12 22:09 IST   |   Update On 2020-04-12 22:09:00 IST
ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் பொதுமக்கள் மற்றும் பார்வையற்றோருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலம் வடக்கு வட்டப்பகு தியில் உள்ள அறிவொளி நகரில் பொதுமக்கள் மற்றும் பார்வையற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் 144 ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடக்கப்பபட்டுள்ளவர்களுக்கு ஆலங்குடி தாசில்தார் கலைமணி தலைமையில் அரிசி பை, உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர்கள் குணசேகரன், கீரமங்கலம் முருகேசன், வல்லநாடு வெண்ணிலா, கிராம நிர்வாக அலுவலர்கள் சரண்யா, புஷ்பராஜ் மற்றும் கிராம உதவியாளர் செந்தில், கோகிலா, மகேஸ்வரன், அப்பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News