செய்திகள்
பொன்னமராவதியில் கஞ்சா வழக்கில் 4 பேர் கைது
பொன்னமராவதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த 4 பேரை கைது செய்தனர்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை மறித்து சோதனை செய்தனர். இதில் அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் நடத்திய விசாரணையில் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த சுபாஸ்சங்கர் (20), அஜீத்குமார் (22), பொன்னமராவதி பகு தியை சேர்ந்த வினோத் (22) ஆகிய 3 பேரும் திண்டுக்கல் மணக்காட்டூர் ஆலம்பட்டியில் பொன்னன் (52) என்பவரிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்வதும் தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை மறித்து சோதனை செய்தனர். இதில் அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் நடத்திய விசாரணையில் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த சுபாஸ்சங்கர் (20), அஜீத்குமார் (22), பொன்னமராவதி பகு தியை சேர்ந்த வினோத் (22) ஆகிய 3 பேரும் திண்டுக்கல் மணக்காட்டூர் ஆலம்பட்டியில் பொன்னன் (52) என்பவரிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.