செய்திகள்
ஆலங்குடி அருகே தடையை மீறி குளத்தில் மீன் பிடித்த 12 பேர் கைது
ஆலங்குடி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி குளத்தில் மீன் பிடித்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகேயுள்ள அனவயல் கிராமத்தில் உள்ள தானாண்டி அம்மன் கோவிலில் குளம் உள்ளது. இந்த குளத்தில் அதே பகுதியை சேர்ந்த 12 பேர் ஊரடங்கு தடை உத்தரவை மீறி மீன் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்சீனிவாசன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த 12 பேரையும் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.