செய்திகள்
தற்கொலை

மது கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

Published On 2020-04-08 11:56 GMT   |   Update On 2020-04-08 11:56 GMT
அறந்தாங்கி அருகே மது கிடைக்காத விரக்தியில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 42) டிரைவர். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர். ஊரடங்கு அமலில் இருப்பதையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மது கிடைக்காத விரக்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட கருப்பையா நேற்று அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News