செய்திகள்
கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்த போது எடுத்த படம்.

அரசு உத்தரவை மீறி திறந்திருந்த இறைச்சி கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2020-04-07 14:16 GMT   |   Update On 2020-04-07 14:16 GMT
அரசு உத்தரவை மீறி திறந்திருந்த இறைச்சி கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள இறைச்சி கடைகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு உத்தரவை மீறி புதுக்கோட்டை தெற்கு 4-ம் வீதியில் உள்ள ஒரு இறைச்சி கடையை திறந்து கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நகராட்சி நகர்நல அலுவலர் யாழினி தலைமையிலான அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இறைச்சி கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இறைச்சி கடை திறக்கப்பட்டு கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் கடையில் இருந்த கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் கடையின் உரிமையாளர் நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் அதை அவர்கள் எடுத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News