செய்திகள்
புதுவை மாவட்ட கலெக்டர் அருண்

ஊரடங்கை மீறியதாக 1306 வழக்குகள் பதிவு, 6218 வாகனங்கள் பறிமுதல் - கலெக்டர் அருண் தகவல்

Published On 2020-04-06 11:15 GMT   |   Update On 2020-04-06 11:15 GMT
ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1306 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1218 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் இதுவரை 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 நபர்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். அவசர அழைப்பு எண் 104-க்கு இதுவரை 1898 அழைப்புகள் பெறப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1306 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 218 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையற்ற காரணங்களுக்காக சாலையில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 526 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகளான அரியாங்குப்பம், திருக்கனூர், திருபுவனை, காட்டேரிக்குப்பம், முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே வராமல் மருத்துவ உதவிக்கு 104, ஊரடங்கு புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 1070 மற்றும் 1077, மளிகை மற்றும் காய்கறிகள் வீடுதேடி வழங்குவதற்கு 2253345 மற்றும் 2251691 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் இவ்வாறு கலெக்டர் அருண் அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News