செய்திகள்
மரணம்

தஞ்சையில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு

Published On 2020-04-06 11:04 GMT   |   Update On 2020-04-06 11:04 GMT
தஞ்சையில் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்:

தஞ்சை பாலாஜி நகர் பகுதியில் நடந்து சென்ற 60 வயது முதியவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நீலகிரிதோட்டம் கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News