செய்திகள்
ஆலங்குடி அருகே செரியலூர் இனாம் ஊராட்சியில் உப்பு கலந்த கிருமி நாசினி தெளிப்பு
ஆலங்குடி அருகே உள்ள செரியலூர் இனாம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கீரமங்கலம் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள செரியலூர் இனாம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கீரமங்கலம் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு செரியலூர் இனாம் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ்.முகமது ஜியாவூதின் தலைமை தாங்கி னார். செரியலூர் இனாம் ஊராட்சி செயலாளர் இன்பஜோதி வரவேற்றார்.
திருவரங்குளம் வட்டார ஆணையர் ஸ்ரீதரன் மற்றும் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சிகள் சங்கர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செரியலூர் இனாம் ஊராட்சி தெக்கிக்காடு மேல் பகுதியிலிருந்து கீரமங்கலம் செரியலூர் சாலைகள் வழியாக செரியலூர் இனாம், கறம்பக்காடு இனாம், காதர் மொகைதீன் நகர் மற்றும் பல்வேறு கிராமத்திற்கும் சுமார் 5 ஆயிரம் லிட்டர் கொரோனா வைரஸ் தடுப்பு உப்பு கலந்த நீர் சாலைகளிலும், சாலையோர வீடுகளிலும் தீயணைப்பு வாகனம் மூலம் தெளிக்கப்பட்டது.
புதுக்கோட்டைமாவட்டத் தில் ஆலங்குடி தாலுகாவில் முதன் முதலில் செரியலூர் இனாம் ஊராட்சியில் தான் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஊராட்சியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் 144 தடை பற்றியும் ஊராட்சியில் சுகாதாரம் பற்றி திருவரங்குளம் வட்டார ஆணையர் ஸ்ரீதரன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதனால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கிருமி நாசினி கலந்த நீரை தெளிக்க உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் கீரமங்கலம் தீயணைப்பு நிலைய மூத்தியா (முன்னணி தீயணைப்போர்) ராமலிங்கம், திருநாவுக்கரசர் மற்றும் கீரமங்கலம் மருத்துவர் சுகாதார ஆய்வாளார் சேகர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மேற்பார்வையாளர், துப்புரவு பணியாளர்கள் பொது மக்கள், செரியலூர் இனாம், தீயணைப்பு நிலைய காவல் மீட்பு குழுவினர் ஆகியோர் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.