செய்திகள்
பாம்பு

கந்தர்வகோட்டை அருகே பாம்பு கடித்து பெண் பலி

Published On 2020-03-20 13:20 GMT   |   Update On 2020-03-20 13:20 GMT
கந்தர்வகோட்டை அருகே விவசாய வேலையில் ஈடுபட்ட பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலங்குடி:

கந்தர்வகோட்டை அருகேயுள்ள சிவன்தான்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சகிலா (வயது 60). இவர் வீட்டின் அருகே விவசாய வேலையில் ஈடுபட்ட போது அங்கு வந்த விஷபாம்பு சகிலாவைகடித்தது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News