கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்த சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், நரி, முயல், காட்டுப்பன்றி, குரங்கு போன்ற விலங்குகள் உள்ளது. இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் வன விலங்குகள் கணக் கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நேற்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
தஞ்சாவூர் வனமண்டலம் வனபாதுகாவலர் ராம சுப்பிரமணியன், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் கலாநிதி, உத்தரவின் பேரில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இப்பணியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவ-மாணவிகள் பேராசிரியர் பாஸ்கரன், வேலுர் பல் கலைக்கழக மாணவ- மாணவிகள், பேராசிரியர் குமர குரு மற்றும் ஓய்வு பெற்ற வனச்சரக அலுவலர் சுப்பையா மற்றும் வன ஆர்வலர்கள், கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனவர் சதிஷ்குமார், மற்றும் வனத்துறை பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி 14 வழித் தடங்களில் நடைபெற்று வருகிறது.